சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமர் நரேந்திர மோடி நேற்று (21ம் தேதி) காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.