பொன்னமராவதி: பொன்னமராவதி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் செயல் முறை விளக்கம் நடைபெற்றது. பொன்னமராவதியில் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி முன்னிலையில் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் செயல் முறை விளக்கம் நடத்தப்பட்டது. இதில் வட்டார மருத்துவ டாக்டர் அருள்மணி நாகராஜன் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி உள்ளாட்சியின் பங்களிப்பு சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பொது மக்களிடையே கருத்துகளை கேட்டறிந்தார். சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் கொரோனா வைரஸ்சிலிருந்து தற்காத்துக் கொள்ள எவ்வாறு கை கழுவும், தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.