சென்னை: கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ன. இந்நிலையில், எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு பிரீமியம், கடன் மற்றும் கடனுக்கான வட்டியை பாதுகாப்பாக செலுத்த கேட்டுக்கொள்கிறது. அதன்படி பீம் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, e-wallet மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் பிரீமியம் செலுத்த அறிவுறுத்தியுள்ளது.