சென்னை: கொரோனா வைரஸ் பரவாமலிருக்க உயர் நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூட வேண்டாம் என்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பாது காப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கூட்டமாக இல்லாமல் இருப்பதும், பிறரிடம் இருந்து தள்ளியிருப்பதும்தான் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு தீர்வு என்பதால் உயர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள், வழக்காடிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் கூட வேண்டாம்.