சென்னை: சிறப்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு அழைத்து செல்ல கோரி தேனாம்பேட்டையில் உள்ள மலேசியா துணை தூதரகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொரோனா பாதிப்பு காரணமாக மலேசியா தனது எல்லைகளை மூடி உள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வரும் விமானங்கள் வருவதற்கு அந்த நாடு தடை வித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் 3 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.