சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில், 21ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் 22ம் தேதி இரவு 10 மணி வரை இயக்கப்பட இருந்த பயணிகள் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.