இளநிலை அறிவியல் அதிகாரி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:தடய அறிவியல் துறையில் உள்ள இளநிலை அறிவியல்  அதிகாரி பதவி மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான முறையே முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு  தற்காலிமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 23ம் தேதி முதல் 30ம் தேதி மாலை 5.30 மணி வரை அரசு வேலை நாட்களில்  தங்களது மூலச்சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக ஸ்கேன் செய்து தேர்வாணைய  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: