சென்னை : சிங்கப்பூரில் இருந்து ஒரே ஒரு பயணியுடன் டைகர் ஏர்வேஸ் விமானம் சென்னை வந்துள்ளது.ஒடிஸாவை சேர்ந்த பயணி ஒருவருடன் விமானம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. கொரோனா அச்சுறுத்தலால் போதிய பயணிகள் வராததால் ஒரே ஒருவர் மட்டும் விமானத்தில் பயணித்துள்ளனர். இதனிடையே சென்னையில் இருந்து சிங்கப்பூர் திரும்ப உள்ள விமானத்தில் 168 பேர் பயணிக்க உள்ளனர்.