பட்டாபிராம்: வண்டலூர்-நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேடவாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அபி நரசிம்மன் (54). இவர், ஆவடி அடுத்த பட்டாபிராம் ஐ.ஏ.எப் சாலையில் சினிமா துறை சம்பந்தப்பட்ட நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அபி நரசிம்மன் வீட்டில் இருந்து காரில் தனது அலுவலகத்துக்கு புறப்பட்டார். அவரே காரை ஓட்டிக்கொண்டு வந்தார். வண்டலூர்- நெமிலிச்சேரி வெளி வட்ட சாலையில், பட்டாபிராம் அருகே ராமாபுரம் பகுதியில் சென்றபோது காரின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனால், அபி நரசிம்மன் காரை நிறுத்திவிட்டு அவசரமாக கீழே இறங்கினார்.