சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத அளவுக்கு தேவை குறைந்ததால், ஓலா, உபர் போன்ற கால்டாக்சிகளின் கட்டணம் பெருமளவு சரிந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள தீவிர நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து முடங்கி, சாலைகள் வெறுச்சோடி காணப்படுகின்றன.