சென்னை: சென்னை பெருநகர பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகங்களை மூடுவதற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயம்பேட்டில் அமைந்துள்ள பெருநகர பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு காய்கனி அங்காடி பொதுமக்கள் நாள்தோறும் அதிகம் பயன்படுத்தும் மற்றும் கூடும் இடங்களாக உள்ளன. இருப்பினும் பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கு போக்குவரத்தும், காய்கனி அங்காடி மிகவும் இன்றியமையாதவை.