சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை காவல் நிலையங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை கழுவுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ குழுவினர் ஒவ்வொரு காவல்துறையினருக்கும் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்கள். அது தொடர்பாக கடந்த 1 வாரங்களில் பல்வேறு இடங்களில் உள்ள காவல்துறையினருக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த 2 தினங்களாக தமிழக அரசு வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் மூலமாக பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற முக்கிய இடங்களில் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ குழுவினர் விழிப்புணர்வு முகாம்களை அமைத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்கள் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.