கலசபாக்கம்: கலசபாக்கம் அடுத்த சீத்தம்பட்டு கிராமத்தில் வெட்ட வெளியில் பாதாள லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவ்வழியாக சென்றவர்கள் சிவலிங்கத்தின் மேல் பாகம் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர்.