மூடப்பட்ட ஷாப்பிங் மால்கள், கடைகள் சென்னை சாலைகள் வெறிச்சோடியது

சென்னை: ஷாப்பிங் மால்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடல், ஆர்ப்பாட்டம், போராட்டம், கூட்டங்களுக்கு தடை காரணமாக சென்னை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா பீதி காரணமாக சென்னையில் கடைகள், மால்கள், சினிமா, பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது. இவைகள் திறந்து இருக்கும்போது சென்னை மற்றும் புறநகர் சாலைகள் எப்போதும் பிசியாகவே இருக்கும்.

கொரோனா அறிவிப்புக்கு பிறகு சென்னையில்  பரபரப்பாக இருக்கும் அண்ணா சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலை கடந்த இரு  நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது. ஓ.எம்.ஆர். சாலையில் நாவலூரில் உள்ள  விவிரா மால், மெரினா மால், ஏ.ஜி.எஸ்., ஐநாக்ஸ் திரையரங்கங்கள், கிழக்கு  கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் போன்றவை பொதுமக்கள் இன்றி காலியாக இருந்தன.  மால்களில் மட்டும் சில கடைகள் திறக்கப்பட்டு ஊழியர்கள் சோதனைக்கு பிறகு  உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை அடுக்கி  வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: