சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ் , ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகிய 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரைத்தது.