சென்னை: கொரோனா ைவரஸ் தாக்கம் காரணமாக ரயில்களில் பயணிகள் கேட்டால் மட்டுமே கம்பளி போர்வைகள் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து ரயில் நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ரயில் பெட்டிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் ஏசி பெட்டிகளில் பயணிகள் கேட்டால் மட்டுமே கம்பளி போர்வைகள் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.