சென்னை: சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவன் சிடி மணி(எ)மணிகண்டன்(35). அதேபோல் வடசென்னையை தனது கட்டுப்பட்டில் வைத்துள்ள பிராட்வே வள்ளுவர் நகரை சேர்ந்தவன் காக்கா தோப்பு பாலாஜி (39). கடந்த 3ம் தேதி சிடி.மணி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கும், காக்கா தோப்பு பாலாஜி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு விசாரணை முடிந்தவுடன் சிடி மணி தனது சொகுசு காரில் காக்கா தோப்பு பாலாஜியை ஏற்றி கொண்டு தேனாம்பேட்டை நோக்கி வந்தான். அப்போது கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் சிடி.மணி கார் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.