சென்னை:அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும் இளநிலை பொறியியல், முதுநிலை பொறியியல் பட்டங்கள் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் தேர்வில் அரியர்ஸ் வைக்காமல் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதி. அப்படி அரியர்ஸ் வைக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அந்த நிலுவைத் தேர்வுகளை எழுதி முடிக்க வேண்டும். இந்நிலையில், கடந்த மே மாதம் நடந்த 252வது அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தையும் தாண்டி மீண்டும் அந்த தேர்வுகளை சிறப்பு வாய்ப்பாக எடுத்து எழுதலாம் என்று அனுமதி அளித்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் தேர்வில் மாணவர்கள் இந்த வ ாய்ப்பை பயன்படுத்தி தேர்வு எழுதலாம்.