சென்னை: கொரோனாவால் அண்டை மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்குள் வைரஸ் காய்ச்சல் ஊடுருவாமல் தடுப்பதற்காக மாநில எல்லைகளுக்கு சீல் வைக்க தலைமைச் செயலாளர் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தநிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உள்ளாட்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், வீட்டு வசதித்துறை செயலாளர் ராஜேஷ் லகானி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொரோனாவால் அண்டை மாநிலங்கள் பாதிப்பு எதிரொலி மாநில எல்லைகளுக்கு சீல்வைப்பு: தலைமை செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
- மாநிலங்களில்
- சந்தித்தல்
- பிரதம செயலாளர்
- கொரோனா எதிரொலி
- மாநில எல்லைகளுக்கு கொரோனா சீல்: அண்டை மாநிலங்களின் முடிவுகள்