திருவொற்றியூர்: மாதவரம் பகுதியில் உரிமம் இல்லாமல் இயங்கிய 19 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் செல்பட்டு வருகின்றன. இவற்றில் பல கடைகள், வணிக நிறுவனங்கள் முறையாக தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி செலுத்தாததால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, மண்டலம் வாரியாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் அயனாவரம், கொளத்தூர் பெரவள்ளூர், ெசம்பியம் ஆகிய பகுதிகளில் தொழில் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்ட 22 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.