அண்ணாநகர் பகுதியில் 66 கண்காணிப்பு கேமரா

அண்ணாநகர்: சென்னை பெருநகரில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் வசதியாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.  அதன்படி, அண்ணாநகர் பகுதியில் ₹12.5 லட்சம் செலவில் 66 புதிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இதனை, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேற்று இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், துணை ஆணையர் அசோக்குமார், உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சக்திவேல்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: