அண்ணாநகர்: சென்னை பெருநகரில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் வசதியாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, அண்ணாநகர் பகுதியில் ₹12.5 லட்சம் செலவில் 66 புதிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இதனை, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேற்று இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், துணை ஆணையர் அசோக்குமார், உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.