சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சி தொடர்பாக முதல்வருடன் அரசு தலைமை ஹாஜி சந்திப்பு

சென்னை : சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சி தொடர்பாக முதல்வருடன் அரசு தலைமை ஹாஜி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சியை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. என்பிஆர்,என்ஆர்சிக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்கட்சிகள் ெதாடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கும் வரையில் தமிழகத்தில் சிஏஏ,என்ஆர்சி,ஏன்பிஆர் அமல்படுத்தபடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப், தாவூத் மியாகான் உள்ளிட்டவர்கள் முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர். இதில் சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சியை செயல்படுத்த கூடாது என்று அவர்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

Related Stories: