சென்னை: திட்டச் செலவுகள் வசூலான சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. திருச்சியை சேர்ந்த தங்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 74 தேசிய சாலைகளுக்கான திட்டச் செலவு முழுவதும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 62 சுங்கச் சாவடிகளை மூடி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சாலைகளை அமைத்தற்கான முதலீட்டு தொகைகள் முழுவதும் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த சாலைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள். மாநில சாலைகளாக உள்ள 600 கிலோ மீட்டர் சாலையை ரூ.100 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகளிடம் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே, சாலைகள் கட்டமைப்பிற்காக ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் ரூ.9 கூடுதல் வசூலிக்கப்படுகிறது.
திட்டச் செலவு வசூலான சாலைகளிலுள்ள சுங்கச்சாவடிகளை மூட உத்தரவிடக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
- கேட்டு
- சாலைகள்
- உயர் நீதிமன்ற உயர் செலவு சாலைகள்
- ஒத்திவைப்பு விசாரணை
- வழக்குக்கான சுங்க கடமை நிறைவு: உயர் நீதிமன்றம்