சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் எண்ணமோ, பிரிக்கும் எண்ணமோ அரசுக்கு இல்லை என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்கம் எண்ணமும் இல்லை எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.