மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு: நடிகர் ரஜினி விளக்கம்

சென்னை: 2017ம் ஆண்டுக்கு பிறகு தான் அரசியல் வருகை குறித்து அறிவித்தேன் என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார். நட்சத்திர ஓட்டலில் மக்கள் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் பேசிய அவர், எனது அரசியல் பற்றி மக்களுக்கு ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கவே செய்தியாளர்களை சந்திக்கிறேன். மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு. 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருகிறேன் என நான் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories: