திருப்பதி: திருப்பதி அருகே கொள்ளையடித்த பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதியை சேர்ந்தவர்கள் கணேஷ் (24), சிவா (21), சுப்பையா (20) நண்பர்கள் 3 பேரும் திருப்பதி பஸ் நிலையம், கோவிலுக்கு தனியாக நடந்து செல்லும் பக்தர்களை மிரட்டி நகை, பணம், செல்போன் உள்ளிட்டவைகளை பறித்து செல்வது வாடிக்கையாக கொண்டிருந்தனர். கொள்ளையடிக்கும் பணத்தை 3 பேரும் பங்கு பிரித்து கொண்டு மது, மாது என உல்லாசமாக இருந்துள்ளனர்.