சென்னை: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜரின் பெயரை வைக்க வேண்டும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு முனையத்திற்கு, ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரை மீண்டும் வைக்கவேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ சென்னை விமான நிலையத்தில் மறு நிர்மாணம் செய்யப்பட்டுள்ள உள்நாட்டு முனையத்திற்கு, ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரை மீண்டும் வைப்பதில் காட்டப்படும் தயக்கம் வருத்தமளிக்கிறது.