சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனா, இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் படிப்படியாகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 61 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.