சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரக்கூடிய நிலையில், இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர். தற்போது சென்னை காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் முகாமானது நடைபெற்று வருகிறது. சென்னை காவல் தலைமையக கூடுதல் ஆணையர் ஜெயராமன் மற்றும் ஆயுதப்படை துணை ஆணையர் ரவிசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறையினருக்கு கொரோனா தொடர்பான விவரங்களை எடுத்துரைத்தனர். அதில் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது, எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்த விளக்கங்களை அளித்து வருகின்றனர். காவல்துறையை பொறுத்தவரையில் இதில் குறிப்பாக ஆயுதப்படையினருக்கே முகாம் நடத்தப்படுகிறது.