சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து சென்னை துறைமுகத்துற்குள் மார்ச் 31 வரை வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கப்பல்கள் அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தோற்று என்பது உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழப்புகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனா நோய் என்பது பரவ தொடங்கியிருக்கக்கூடிய நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்டோர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் ஒருவருக்கு அது தொடர்பான அறிகுறி இருப்பதாக தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் கொரோனா நோய் மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.