திண்டிவனம்: திண்டிவனம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீப்பிடித்து எரிந்து நாசமானது. திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது வயலில் 2 ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தார். அறுவடை முடிந்த நிலையில் வைக்கோலை அதே ஊரை சேர்ந்த துரைசாமி என்பவருக்கு விற்றுள்ளார். இதையடுத்து துரைசாமி வயலில் இருந்து வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வந்தார். அப்போது வயல் பகுதியில் தாழ்வாக இருந்த உயர்மின்னழுத்த கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர்.