நாகையில் ரூ. 20 கோடியில் 370 மீட்டர் நீளத்திற்கு தூண்டில் வளைவு அமைக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

நாகை : நாகை  தொகுதிக்குட்பட்ட நாகூர் பட்டினசேரி, வெட்டாற்று வடகரையின் முகத்துவாரத்தில் ரூ. 20 கோடியில் 370 மீட்டர் நீளத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய அவர், மீன்வளத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 50% நாகை மற்றும் குமரி மாவட்டங்களுக்கு செலவிடப்படுகிறது என்றும் குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தின் முகத்துவாரத்தை ஆழம், அகலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Related Stories: