புதுச்சேரி அரசின் அன்றாட பணிகளில் ஆளுநர் தலையிட அதிகாரமில்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் புதுவை ஆளுநர் - அரசு இடையே அதிகார பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசு தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற உத்தரவை எதிர்த்து கிரண்பேடி மற்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் தனித்தனியாக மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டன.

Related Stories: