சென்னை: பணத்தகராறில் திமுக பிரமுகரை வெட்டி கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஆவடி அடுத்த கோவில்பதாகை, வன்னியர் தெருவை சேர்ந்தவர் பதாகை வீரராகவன் (65). ஆவடி நகர திமுக முன்னாள் துணை செயலாளர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மோரை கிராமம் திருமலை நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (55). ஆட்டோ டிரைவர். வீரராகவன் சொல்லும் வேலைகளை பத்மநாபன் செய்து வந்தார். அதற்குரிய பணத்தை பத்மநாபனுக்கு தினமும் வீரராகவன் கொடுப்பது பழக்கம்.இந்நிலையில், சொந்தமாக ஆட்டோ வாங்க பணம் தருமாறு வீரராகவனிடம் பத்மநாபன் கேட்டுள்ளார். இதற்கு வீரராகவன் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதனால், வீரராகவனை கொலை செய்ய பத்மநாபன் திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில், கடந்த 16.11.2016 அன்று மாலை ஆவடி கனரக தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில், வீரராகவன் நடைபயிற்சி செய்தபோது, அங்கு வந்த பத்மநாபன் வீரராகவனை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினார்.