நாகர்கோவில்: கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்டு வருவதற்காக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளன என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்கள் 721 பேர், தீவுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் ஈரானில் தங்கியுள்ள மீனவர்களை சென்று சந்தித்தனர். அதற்கு அவர்களை இந்தியா அழைத்து வர இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.