சென்னை: மார்ச் 20-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 1 லட்சக்கத்துக்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தமானது போடப்படும். அதன் அடிப்படையில் போடப்பட்ட 13-வது ஊதிய ஒப்பந்தமானது முடிவடைந்து 7 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த ஊதிய ஒப்பந்தம் தொடர்பான குழு அமைக்கப்படவில்லை என தொடர்ச்சியாக போக்குவரத்து கழகங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் தொடர்பான 13-வது ஊதியக்குழு பேச்சுவார்த்தை 20 ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு
- குழு பேச்சுவார்த்தைகள்
- சென்னை
- போக்குவரத்து தொழிலாளர்கள்
- போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்த 13 வது ஊதியக் குழு கலந்துரையாடல்