போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் தொடர்பான 13-வது ஊதியக்குழு பேச்சுவார்த்தை 20 ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: மார்ச் 20-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 1 லட்சக்கத்துக்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தமானது போடப்படும். அதன் அடிப்படையில் போடப்பட்ட 13-வது ஊதிய ஒப்பந்தமானது முடிவடைந்து 7 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த ஊதிய ஒப்பந்தம் தொடர்பான குழு அமைக்கப்படவில்லை என தொடர்ச்சியாக போக்குவரத்து கழகங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இன்று கூட ஊதிய ஒப்பந்தம் தொடர்பான குழு அமைக்கப்பட வேண்டும்  என்று போராட்டத்தில் ஈடுபடக்கூடிய ஒரு நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகத்திலிருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கான 14-வது ஊதிய குழு ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னையில் மார்ச் 20-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையானது சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் ஊதிய குழு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: