காவல்துறை அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் மீது வழக்கு

சென்னை: மூத்த நிர்வாக அதிகாரி ரங்கநாயகியை அவதூறாக பேசியதாக அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கண்காணிப்பாளர் மோகன் மீது எழும்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

Related Stories: