சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திவரும் தொடர் போராட்டங்களை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை நாளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், இந்திய அரசமைப்புச் சட்டம் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த உரிமை வழங்கியுள்ள போதும், அதை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு அனுமதியும் இல்லாமல் சில மணி நேரங்களில் ஏராளமானோர் கூடி, சாலை மறியலில் ஈடுபடுவது சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும். சாலை மறியல் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.