ராமநாதபுரம்: இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக அதிகரித்து வரும் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை இந்திய கடற்படை உதவியுடன் முழுமையாக விரைவில் கட்டுப்படுத்துவோம் என இலங்கை கடற்படை தளபதி பியாஸ் டிசில்வா தெரிவித்துள்ளார்.இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக அதிகளவில் தங்கம், கஞ்சா, பீடி இலைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டு, அதிகாரிகள் ேசாதனையில் சிக்கியுள்ளன. இதுகுறித்து கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொண்ட இலங்கை கடற்படை வடக்கு கட்டளை தளபதி பியாஸ் டிசில்வாவிடம் இந்திய ஊடகத்தினர் கேட்டபோது,