சென்னை: அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கணக்கீட்டாளர் தேர்வினை தமிழில் நடத்தவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.தமிழக மின்வாரியம் சமீபத்தில் மின் கணக்கீட்டாளர் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பலரும் விண்ணப்பித்தனர். பிறகு சம்மந்தப்பட்ட தேர்வு ஆங்கிலத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.இதேபோல பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மின்வாரியம் தேர்வை தமிழிலும் நடத்துவதாக அறிவித்துள்ளது.