சென்னை: நீர்வரத்து கால்வாயை சீரமைக்கும்போது கால்வாயில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து பலியானார். ஸ்ரீபெரும்புதூர் அருகே கருணாகரச்சேரி, பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (55). விவசாயி. இவருக்கு சசிகலா என்ற மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று காலை 20க்கும் மேற்பட்ட, விவசாயிகள் கருணாகரச்சேரி ஏரி வரத்து கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின் கம்பத்தில் இருந்து வயர் அறுந்து கால்வாயில் விழுந்து கிடந்துள்ளது. அப்போது கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஞானவேல் வயரை மிதித்துள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட ஞானவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.