மூத்தோர் தடகளம்: அரங்கசாமி அசத்தல்

சென்னை: மணிப்பூர் மாநிலம் இம்பாலில், 41வது அகில இந்திய மூத்தோர் தடகளப் போட்டிகள் நடந்தது. ஈட்டி எறிதல் போட்டியின் 80-84 வயது பிரிவில், சென்னையை சேர்ந்த அரங்கசாமி (80) பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். அதுபோல் 4X100, 4X400 தொடர் ஓட்டங்களில் தலா ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.

விரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள அரங்கசாமி,  பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை 40 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை திரும்பிய அவருக்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: