சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட வணிகர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: அண்மை காலமாக உலகம் முழுமையும் கொரானோ வைரஸ் வெகு வேகமாக சீனா தொடங்கி தமிழ்நாடு வரை பரவி மக்களின் இன்னுயிரை பறித்து வருகிறது. இந்தவகை வைரஸ் பரவி வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருந்தாலும், வணிகர்கள் இதை பொதுமக்களிடமும் நம் வணிகக் குடும்பங்களிடையே அதீத விழிப்புணர்வை ஏற்படுத்தி வீண் உயிர்பலிகளை தடுத்திடுவது நமது தலையாய கடமையாகும்.