சென்னை: மதவாத அமைப்புகளை கண்டித்து வரும் 14ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களுக்கு 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை, மானாவாரி நிலங்களும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடிமனைகளும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு கடைகளும் உள்ளன. இவற்றை பயன்படுத்துபவர்கள் 95 சதவீதம் பேர் சாதாரண ஏழை இந்து மக்களே, இவர்களுக்கு தற்போது அறநிலையத்துறை வாடகை, குத்தகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
மதவாத அமைப்புகளை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் 14ம்தேதி ஆர்ப்பாட்டம்: அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு
- ஆர்ப்பாட்டம்
- கோட்டை
- வள்ளுவர்
- அனைத்து மத நில பயன்பாட்டு பாதுகாப்பு சங்கம்
- அமைப்புக்கள்
- அறிவிப்பு
- வள்ளுவர் கோட்டை
- மத அமைப்புகளை மறுப்பது 14 வது ஆர்ப்பாட்டம்