சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் பாரதிராஜா எஸ். ஏ. சந்திரசேகர், கேயார், கே. முரளிதரன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்ற மாநில தயாரிப்பாளர் சங்கத்திற்கு முன்னோடி சங்கமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.தேர்தலில் போட்டியிட்டால், அதற்கு பணம் செலவழிக்கப்படும். அதன் மூலம் வெற்றி பெறுகிறவர்கள் செலவழித்த பணத்தை எடுக்கத்தான் நினைப்பார்கள்.