பெரம்பூர்: மின்சார ரயிலில் அடிபட்டு பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். புளியந்தொப்பு, நேரு நகரை சேர்ந்தவர் சோமு (54). இவர் நேற்று காலை 8.30 மணி அளவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.