ஆசிரியை அடித்து மாணவன் கண்பார்வை பறிபோனது பற்றி பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: ஆசிரியை அடித்து மாணவன் கண்பார்வை பறிபோனது பற்றி பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மாதம் 4-ம் தேதி பள்ளிக்குச் சென்ற கார்த்திக்கின் பின் மண்டையில் பெண் ஆசிரியயை இரும்பு ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், கார்த்திக்கின் தலையில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில் சிறிது தினங்களில் அவருக்கு பார்வை கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் மருத்துவமனையை அணுகிய நிலையில், மாணவரின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் அவரது கண் சற்று வெளியே வந்துள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories: