திருச்சியில் போராட்டம்: 1300 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி: குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி திருச்சியில் முஸ்லிம்கள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜமால் முகமது கல்லூரி மாணவர் கூட்டமைப்பினர் நேற்றுமுன்தினம் போராட்டம் நடத்தினர். இதில், 258 பேர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 1045 பேர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: