அகமத்நகர்: மகாராஷ்டிரா மாநிலம் டோப்கானா போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 29 வயது பெண் ஒருவர் கடந்த 2016ம் தேதி சிலருக்கு எதிராக போலீசில் பலாத்கார புகார் அளித்திருந்தார். அந்த புகாரை வாபஸ் பெறுமாறு அவருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் 24ம் தேதியன்று அந்த பெண்ணும் அவரது கணவரும் வெளியே சென்று விட்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோவில் அவர்களுடன் பயணம் செய்த ஆசாமி ஒருவன் தன்னிடமிருந்த மயக்க மருந்து ஸ்பிரேயை எடுத்து கணவன், மனைவி முகத்தில் அடித்தான். இதனால் இருவரும் மயங்கிப் போனார்கள். இதையடுத்து, அந்த தம்பதியர் ஒரு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைபிடிக்கப்பட்டனர். அந்த அறையில் மொத்தம் 5 பேர் இருந்தனர். போலீசில் அளித்த பலாத்கார புகாரை வாபஸ் பெறுமாறு தம்பதியரை அந்த 5 பேரும் மிரட்டினர். இந்த 5 பேரில் இருவருக்கு எதிராகத்தான் பலாத்கார புகார் அளிக்கப்பட்டிருந்தது.