சென்னை: சூளைமேடு என்.எம்.சாலையை சேர்ந்த கார்த்திக் (20), மணிமாறன் (19), வட அகரம் 1வது தெருவை சேர்ந்த கரண் (எ) சாலமன் (20) மற்றும் கிழக்கு நமச்சிவயபுரத்தை சேர்ந்த விதன்குமார் (20) ஆகியோர் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்கிடையே கடந்த மாதம் கார்த்திக், மணிமாறன், சாலமன், விதன்குமார் ஆகிய 4 பேரும், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன் முன்பு ஆஜராகி, ஓராண்டுக்கு எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என்று நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து போட்டனர்.